ஒக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அறிவித்தது ஆஸ்திரேலியா
ஒக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலுமே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் பெரும்பாலும் ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை ; சார்ல்டன் அறிவித்தார்.
பன்முக கலாச்சாரத்துக்கு ஆஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் விதமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய நாட்டின் சமூக கட்டமைப்பு ரீதியாக இந்துக்களின் பங்களிப்பையும் இது அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் பழமை வாய்ந்த இந்து மத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்துக்கு ஆஸ்திரேலியா மதிப்பளிக்கிறது. இது உலக அரங்கில் தற்போது கவனம் பெற்றுள்ளது.