குயின்ஸ்லாந்தில் நடுக் கடலில் ஸ்நோர்கெலிங் செய்துகொண்டிருந்த பெண் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 57 வயது பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
கடற்படை கப்பல் ஊடாக கரைக்கு கொண்டுவரப்பட்டு, அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் பின்னர் சுமார் 5 மணிநேரம்வரை, கடற்படை உதவிக்காக அவர் காத்திருந்ததாக கூறப்படுகின்றது.