டார்வினின் வடக்கு புறநகர் பகுதியில் வாகனம் மோதியதில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியில் நடந்துகொண்டிருந்த மூன்று பெண்கள்மீது நேற்று வாகனம் மோதியுள்ளது. அவர்களை மோதி தள்ளிவிட்டு வாகன சாரதி, வாகனத்துடன் தப்பியோடியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே 47 மற்றும் 62 வயதுகளுடைய இரு பெண்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
சாரதியை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையும் ஆரம்பமாகியுள்ளது.
Northern Territory இல் இவ்வருடம் இதுவரை இடம்பெற்ற விபத்துகளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 50 சதவீத அதிகரிப்பாகும்.
இவ்வருடம் உயிரிழந்த 56 பேரில் 14 பேர் பாதசாரிகளாவர்.