• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழர்கள்? குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

YazhavanbyYazhavan
in Australia
July 7, 2019
42
SHARES

மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 வயதுச்சிறுமி தருணிக்காவின் தலையில் உண்டான காயத்திற்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துவருவதாக SBS ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகளான தருணிக்காவின் தலையில் whiteboard விழுந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு குடிவரவு தடுப்புமுகாம் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும், சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக தருணிக்கா காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக காத்திருந்தபோது தருணிக்கா இரு தடவைகள் வாந்தி எடுத்ததுடன் அவரது முகம் வீக்கமடைந்ததையடுத்தே அதிகாரிகள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றதாக அகதிகள் செயற்பாட்டாளர் அஞ்சலா தெரிவித்துள்ளார்.

46 இலங்கையர்களைக் திருப்பியனுப்பியது ஆஸி.!

தமிழ் குடும்பத்துக்கு நிரந்தர வீசா வழங்கியது ஆஸி.

ஆஸ்திரேலியாவின் இராணுவச் செலவு அதிகரிப்பு

தருணிக்காவின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவரது கால்கள் பலவீனம் அடைந்துள்ள போதிலும் அது படிப்படியாக சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்த பின்னணியில் மருத்துவ சிகிச்சைகளையடுத்து தடுப்பு முகாம் திரும்பியுள்ள தருணிக்கா தற்போது குணமடைந்து வருவதாகவும் அஞ்சலா கூறியுள்ளார்.

மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு தருணிக்கா உட்பட ஆஸ்திரேலியாவில் பிறந்த இருபெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள போதும், இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்துவருகிறார்.

Related

பரிந்துரை

‘தமிழ் மக்களின் மனங்களை வெல்லவும்’ – ஜனாதிபதிக்கு அழைப்பு

2 days ago

அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி

3 days ago

கூட்டமைப்புக்குள் இரு கறுப்பாடுகள்! செல்வம் எம்.பி. பகீர் தகவல்!

7 days ago

ரணிலின் ‘சர்வக்கட்சி வலை’யில் சிக்கப்போவது யார்?

3 days ago

யாழில் விபத்து – இளைஞன் பலி!

6 days ago

கைதான இந்திய மீனவர்களுக்கு மறியல்!

2 days ago

கோட்டாகோகம கூடாரங்கள் அகற்றப்படுவதற்கு தடை கோரிய மனுக்கள் வாபஸ்!

4 days ago

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம்!

2 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழர்கள்? குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

YazhavanbyYazhavan
in Australia
July 7, 2019
42
SHARES

மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 வயதுச்சிறுமி தருணிக்காவின் தலையில் உண்டான காயத்திற்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துவருவதாக SBS ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகளான தருணிக்காவின் தலையில் whiteboard விழுந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு குடிவரவு தடுப்புமுகாம் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும், சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக தருணிக்கா காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக காத்திருந்தபோது தருணிக்கா இரு தடவைகள் வாந்தி எடுத்ததுடன் அவரது முகம் வீக்கமடைந்ததையடுத்தே அதிகாரிகள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றதாக அகதிகள் செயற்பாட்டாளர் அஞ்சலா தெரிவித்துள்ளார்.

46 இலங்கையர்களைக் திருப்பியனுப்பியது ஆஸி.!

தமிழ் குடும்பத்துக்கு நிரந்தர வீசா வழங்கியது ஆஸி.

ஆஸ்திரேலியாவின் இராணுவச் செலவு அதிகரிப்பு

தருணிக்காவின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவரது கால்கள் பலவீனம் அடைந்துள்ள போதிலும் அது படிப்படியாக சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்த பின்னணியில் மருத்துவ சிகிச்சைகளையடுத்து தடுப்பு முகாம் திரும்பியுள்ள தருணிக்கா தற்போது குணமடைந்து வருவதாகவும் அஞ்சலா கூறியுள்ளார்.

மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு தருணிக்கா உட்பட ஆஸ்திரேலியாவில் பிறந்த இருபெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள போதும், இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்துவருகிறார்.

Related

பரிந்துரை

உயர் அந்தஸ்த்தை இழக்கிறது மரஅணில்!

2 days ago

‘அடிப்படை மனித உரிமைகளில் கைவைக்க வேண்டாம்’

6 days ago

46 தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை – விக்கி நம்பிக்கை

18 hours ago

கூட்டமைப்பை வைத்து கும்மி அடித்தவர்கள் எங்கள் கூட்டணியையும் உடைக்க சதி!

6 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!