விக்டோரியா, பக்கென்ஹாம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மூன்று ஆண்களடங்கிய குழுவொன்று, நபரொருவரை தேடிச்சென்றுள்ளது.
இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டவேளையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். அவர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
மூவரில் ஏனைய இருவர் தப்பியோடியுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுவருகின்றது.