புகழ்பெற்ற பூர்வக்குடி பாடகியான Emma Donovan இற்கு, பேர்த் விமான நிலையத்தில் வாடகை வாகன சேவையை வழங்குவதற்கு டாக்சி ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
“ உங்களை போன்ற மக்களுக்கு சேவை வழங்கப்படமாட்டாது என ஓட்டுநர் ஒருவர் தன்னிடம் கூறினார் என Emma Donovan குறிப்பிட்டுள்ளார்.
மெல்பேர்ணில் தனது பாடல் ஆல்பத்தை வெளியிட்ட பின்னர் பாடகி பேர்த் நோக்கி வந்துள்ளார்.
இதன்போதே அவருக்கு இப்படியானதொரு சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
தன்னை அழைத்து செல்வது குறித்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது எனவும், இது கட்டணம் தொடர்பானது அல்ல, இனவெறி சார்ந்தது எனவும் பூர்வக்குடி பாடகி Emma Donovan சுட்டிக்காட்டியுள்ளார்.