சிட்னியில் கடலில் மூழ்கி இரு பெண்கள் பலியாகியுள்ளனர். நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடற்கரையில் பாறைகள் ஊடாக சுற்றுலா குழுவினர் நடந்து சென்றுள்ளனர்.
அவ்வாறு நடந்து செல்கையில் வழுக்கி கடலுக்குள் விழுந்தனர் எனவும், பின்னர் அலையில் அடித்துச்சென்றனர் எனவும் தெரியவருகின்றது.
இவ்வனர்த்தத்தையடுத்து அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். தேடுதல் நடவடிக்கையில் விமானமும் ஈடுபடுத்தப்பட்டது.
நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டாலும் அவர்கள் உயிரிழந்துவிட்டனர். மற்றுமொரு பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்;.