ஆஸ்திரேலியாவில் சூதாட்ட இணையத்தளங்களில் பந்தயம் கட்டுவதற்காக ‘கிரெடிட்’ காட்களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய சட்டம் ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இன்று முதல் அது அமுலுக்கு வருகின்றது.
புதிய சட்ட விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காலஅவகாசம் வழங்கும் நோக்கில் ஆறு மாதங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனவே, இன்று முதல் குறித்த தடை உத்தரவை அமுல்படுத்த தவறும் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படவுள்ளது.
“ ஆஸ்திரேலியர்கள் தம்மிடம் இல்லாத பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது.” – என்று தகவல் தொடர்பு அமைச்சர் Michelle Rowland
தெரிவித்தார்.