பரிதவிக்கும் பங்களாதேஷ்! நேசக்கரம் நீட்டுகிறது ஆஸ்திரேலியா!!
வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேசுக்கு 1.8 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான தொகையை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
மனிதாபிமான நிவாரணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவே குறித்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் 6 மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். விவசாய நிலங்கள் வெள்ளநீரில் அழிந்துள்ளன. இணையத்தளம் மற்றும் போக்குவரத்து சேவைகள் என்பன ஸ்தம்பித்துள்ளன.
வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பங்களாதேசுக்கு, வெள்ள அனர்த்தமும் பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆஸ்திரேலியா நிதி உதவி வழங்கியுள்ளது.