மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற பயங்கர கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞன்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி இரவுவேளையிலேயே கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த விக்டோரியா பொலிஸார் 17 வயது சிறுவன் ஒருவரையும், 18 வயது இளைஞன் ஒருவரையும் நேற்று கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் 18 வயது இளைஞன்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மெல்பேர்ண் நீதிமன்றத்தில் அவர் இன்று முற்படுத்தப்படவுள்ளார்.