others

“காசா போர்” – அமைதி பேச்சில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்பு!

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய கிழக்கில் நடைபெறும் அமைதி பேச்சில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சார்பில் அமைச்சர் Anne Aly குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாரம் ஜோர்தானுக்கு செல்கின்றார். வெளிவிவகார அமைச்சர் Penny Wong இன் பிரதிநிதியாகவே அவர் செல்கின்றார்.

எகிப்து, ஜோர்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடனேயே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, 4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 270 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

Related Articles

Back to top button