மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய குணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பொதுப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் சிக்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. மேல் அதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். பிரச்சனைகளை வெளிப்படையாக பேச முடியாது. நிதி நிலைமை சீராக இருக்காது. இன்றைய பிரச்சனைகளிலிருந்து விடுபட குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும். ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய கெட்ட அனுபவங்கள் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும். இப்படித்தான் வாழ வேண்டும், இப்படி வாழ கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள்.…
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்கொட மொரிசன், முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார். இதன்ஓர் அங்கமாகவே இன்று காலை, கொழும்பில் மஹிந்தவை சந்தித்து சமகால நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். ஸ்கொட் மொரிசன் சில மாதங்களுக்கு முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள், விமானசேவைகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. அத்துடன், லண்டனின் பங்குசந்தை செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விமானசேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன, வணிக வளாகங்களின் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. செயல் இழப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின் இயக்க முறைமைகளே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர். இந்த செயல் இழப்புக்கு சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிரவுட் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக பேச்சாளர் , சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமைக்கான அறிகுறி எதுவும் இல்லை…
தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள மொண்டெனேகுரோ நாட்டில் செயற்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார், நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் மற்றும் ஐரோப்பிய பொலிஸார் இணைந்து நடத்திவந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் பலனாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய அதிகாரிகள், பால்கன் நாட்டில் 15 இடங்களில் நடத்திய தேடுதலில் 22 துப்பாக்கிகள், 722 தோட்டாக்கள், 15 வாகனங்கள், சொகுசு கப்பல்கள், பணம் மற்றும் ஆவணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 2020 மற்றும் 2021 இற்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்திவரப்பட்ட 1.8 டொன் கொக்கெய்ன் ஏற்றுமதி தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இந்த விசாரணையின் ஓரங்கமாகவே…
சைபர் தாக்குதல் மூலம் சுமார் 12.9 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் சுகாதாரம் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் களவாடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய வரலாற்றில் இது மிகப்பெரிய இணைய அத்துமீறல் சம்பவமாகக் கருதப்படுகின்றது. மின்னணு மருத்துச் சீட்டு வழங்குநரான MediSecure , 12.9 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதை நேற்று வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெரடல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார். 2019 மார்ச் முதல் 2023 நவம்பர்வரையில் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும், எனினும், கடந்த மே மாதமே இது தெரியவந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. முகவரிகள், பெயர்கள், பிறந்த திகதிகள், மருத்துவ…