க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் குறித்த தகவல்கள் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டுக்கான செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சை நிலையங்கள் குறித்த விபரங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. அட்டவணை வருமாறு- பாட இல பாடம் பரீட்சை நடைபெறும் திகதி மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி 28 மனைப் பொருளியல் 2019.10.19 – 2019.10.26 2019.10.14,15 52 நாடகம் (தேசிய) 2019.09.24 – 2019.10.06 2019.09.18,19 53 நடனம் (பரதம்) 2019.09.24 – 2019.10.06 2019.09.20 54 கீழைத்தேய சங்கீதம் 2019.09.24 – 2019.10.06 2019.09.17 55 கர்நாடக சங்கீதம் 2019.09.24 – 2019.10.06 2019.09.21 56 மேற்கத்தேய சங்கீதம் 2019.09.24 –…
லண்டனிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய யுவதியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா முன்னிலையில் இன்று (19) ஆஜர் படுத்திய போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை-திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது-இலண்டன் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய இளம் யுவதி திரு கடலூர் கடற்கரை ஊடாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது 15 வயது…
கொழும்பில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற 26 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அடுப்பு எரியும் போதே எண்ணெய் ஊற்றியுள்ளார். இதனால் அடுப்பு வெடித்துள்ளதுடன், குறித்த பெண்ணும் பலத்த தீக்காயங்களுக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் திருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில், இவரது திடீர் மரணம் அவரது உறவினர்களை ஆராத துயரில் ஆழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனுத்தாக்குதல் எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது ஆதரவு தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் நடத்திய கலந்துரையாடலில் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த நிலையிலேயே சஜித் அணியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சரான அஷோக்க அபேசிங்க இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். கொழும்பு தனியார் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் சஜித் பிரேமதாஸ அணியைச் சேர்ந்தவருமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக்க அபேசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திற்கே…