ராஜபக்ச அரசாங்கத்தின் போர்க்குற்றவாளிகள், பொறுப்புக்கூற வேண்டிய நாளை எதிர்பார்த்து – காத்திருக்கின்றோம் என்று கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம்.
உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக தப்பியோடிவந்தனர். இந்த வலியின் சுமையையும் அன்புக்குரியவர்களின் நினைவுகளையும் தொடர்ந்து சுமக்கும் பிரம்டன் மற்றும் கனடா தமிழ் சமூகத்துடன் உறுதியாக இணைந்திருக்கின்;றோம்.” எனவும் பிரம்டன் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
பிரம்டன் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் இருப்பிடம் என்பதால் இந்த வருடம் பிரம்டனிற்கு மிகவும் விசேடமானது.இது ஒரு சக்திவாய்ந்த நினைவுச்சின்னமாகும்.
இந்த நினைவுச்சின்னம் கடந்த காலத்தை நினைவூட்டுவதாகவும், உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கான அழைப்பாகவும் விளங்குகின்றது.” – எனவும் மேயர் பட்ரிக் பிரவுன் கூறியுள்ளார்.