கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (01) காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர் மீண்டும் நாளை பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுலில் இருக்கும்.
அத்துடன், அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய பயணிகளுக்கு மாவட்டம் விட்டு மாவடடம் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.