2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை முன்னிலை பெற்றுள்ளது.
அந்த வகையில், யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவன் ஆனந்தசோதி லக்சயன் 194 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சிறந்த வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், தான் இந்தப் பெறுபேறுகளைப் பெற்கொள்வதற்கு தன்னை வழிப்படுத்திய பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவன் நன்றிகளைத் தெரிவித்தார்.