தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விசேடஅமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய சில முடிவுகளை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடைபெறுகின்றது என தெரியவருகின்றது.