“பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை. அப்பதவியில் அவர் தொடர்வார். அத்துடன், அவரிடமிருந்து கல்வி அமைச்சும் பறிக்கப்படமாட்டாது.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஜித ஹேரத்,
“ கல்வி மறுசீரமைப்பென்பது பரந்தப்பட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் வழு இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.
எனினும், குறுகிய நோக்கில் இது விடயம் சம்பந்தமாக அரசியல் நடத்தப்படுகின்றது.
பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டு பொறுப்புடன் செயல்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார்.
கல்வி மறுசீரமைப்பென்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செயவோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது.”எனவும் குறிப்பிட்டார்