யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இன்றைய அகழ்வின் போது ஒரு எலும்புக்கூடு புதிதாக அடையாளம் காணப்பட்டது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 56 வது நாளான இன்று 10 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 583 ஆக அதிகரித்துள்ளது .அவை அனைத்தும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது கட்ட அகழ்விற்கு அனுமதிக்கப்பட்ட 56 நாள்கள் இன்றுடன் நிறைவடைந்தது.