எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுடன் எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
உள்நாட்டுத் எரிபொருள் தேவையில் சுமார் 70 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெறுவதால், விநியோகத் தடையைத் தவிர்க்க தென்கொரியா ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது.
ஆசியாவின் முக்கிய பொருளாதார சக்தியாகத் திகழும் தென் கொரியா, தனது எரிசக்தி இறக்குமதியை எவ்வித இடையூறுமின்றித் தக்கவைத்துக் கொள்வதற்காகவே முன்கூட்டிய ஆயத்த பணிகளின் தற்போது இறங்கியுள்ளது.