அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான போரில் தனக்கு ஆதரவளிக்காத நேட்டோ (NATO) அமைப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது இந்த கூட்டணி நாடுகள் உதவவில்லை என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவது குறித்து அவர் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
கிரீன்லாந்தை ஒரு நிர்வாகத் திறனற்ற பனிப்பிரதேசம் என விமர்சித்தது, ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.