873 பேருக்கு கொரோனா - இருவர் உயிரிழப்பு

banner

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.





நேற்றுமாத்திரம் 873 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.





பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 866 பேருக்கும், கைதிகள் 7 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.





நாட்டில் அண்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாகவும் நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.





இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.





மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆகவும் அதிகரித்துள்ளது.





பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.





கடுமையான நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.