'அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரையும் தாக்கியது கொரோனா'

banner

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.





அதன் முடிவுகள் இன்று (23) வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.





நாட்டில் இதற்கு முன்னர் மூன்று இராஜாங்க அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை இதுவே முதல்முறையாகும்.