இயற்கையும் இலங்கையை வதைக்கிறது!

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் நிலவும் அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.





அத்துடன், சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து 990 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் முழுமையாகவும் 468 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.





ஆயிரத்து 145 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 182 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 33 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.