'கொரோனாவை அடக்க இலங்கையில் மற்றுமொரு தீர்மானம்'
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) நடைபெறும் செயலணிக்கூட்டத்தின்போதே இது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஜுன் மாதம் முழுவதும் பயணத்தடையை அமுல்படுத்துமாறும், குறைந்தபட்சம் ஜுன் 21 ஆம் திகதிவரையாவது கடும் கட்டுப்பாடுகள் அவசியம் என சுகாதார தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பயணத்தடை நீடிப்பு குறித்து அரச தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 11 ஆம் திகதியன்றே அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Related Posts