'பலாலி வடக்கு விடுவிப்பு'

banner

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மேலும் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.





கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த கிராமசபை பிரிவுகளை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.





யாழ். மாவட்டத்தில் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு 254 ஜே கிராம சேவகர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளது.





நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளதால், விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் அந்த நடைமுறை பொருந்தும்.