நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
எட்டு இளைஞர்கள் நீராடுவதற்கும் சென்றுள்ளனர். இதில் 15 மற்றும் 17 வயதுகளுடைய இரு இளைஞர்களே நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
சடலங்கள் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Related Posts