மனைவி சீண்டியதால் வீட்டைக் கொளுத்திய கணவன்

banner

திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.





சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனைவி வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்.





இந்நிலையில் கோபம் கொண்ட கணவர், வீட்டைச் சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை தீ வைத்ததாக கூறப்படும் கணவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.





சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தீ விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.