வடக்கில் மேலும் 30 பேருக்கு கொரோனா

banner

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் உட்பட வடக்கில் மேலும் 30 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவ்வாறு 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அதற்கமைவாக,





* வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும்,
* யாழ். போதனா வைத்தியசாலையில் 03 பேருக்கும் (உயிரிழந்த முதியவர் உட்பட),
* பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் ஒருவருக்கும்,
* முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவருக்கும்,
* மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும்





கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.