சீரற்ற காலநிலையால் யாழில் 25,508 பேர் பாதிப்பு

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 7 ஆயிரத்து 584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.





463 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 75 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.





அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 3,501 குடும்பங்களைச் சேர்ந்த 12, 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.





நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.





அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.





சீரற்ற காலநிலையால் 17,481 குடும்பங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.





1,498 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 23 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.





3,537 பேர் உறவினர்களில் வீடுகளில் தங்கியுள்ளனர்.