பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள 'குழி'

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

கிளிநொச்சி, சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக பாலம் அமைப்பதற்காக வெட்டப்பட்டுள்ள குழியானது, மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக பாடசாலை சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.





கடந்த சில நாட்களுக்கு முன் கரைச்சி பிரதேச சபையினரால் பாலம் அமைப்பதற்காக பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டியுள்ளனர்.





தற்போது பெய்து வரும் மழையால் குறித்த குழியில் நீர் நிரம்பி செல்வதனால் , இதனை ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள் அதனை கடந்து செல்ல முற்படுகின்றனர்.





இவ்வாறு முற்பட்ட மாணவர்கள் சிலர் தவறி வீழ்ந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக ஏனைய உயர் வகுப்பு மாணவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.





ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் இல்லாத நிலையில் குறித்த பகுதி காணப்படுகிறது.





இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அறிவித்துள்ளதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.





எனவே ஒரு விபரீதம் ஏற்பட முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.