வறுமை தாண்டவம் - பெண்களை விற்கும் ஆப்கானிஸ்தான்
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
ந. பரமேஸ்வரன்
2021 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, ஏற்பட்டுள்ள வறுமையால் திருமணத்திற்காக பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்டிபென்டன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
வறுமையால் திருமணத்திற்காக இவ்வாறு பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அதே வேளை எதிர்காலத்தில் திருமணம் செய்யும் நோக்குடன் சிறுமிகளும் விற்பனை செய்யப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் இன்டிபென்டன்ட் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அங்கு புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலிபான்களின் ஆட்சியை ஏற்பதற்கு மேற்குலகம் உட்பட மேலும் பல நாடுகள் மறுத்துள்ளன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இராஜந்திர தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வறுமையும் தாண்டவமாடுகின்றது.
Related Posts