'சொலமன் தீவுகள் ஆஸி. படைகளின் கட்டுப்பாட்டில்'

banner

ந. பரமேஸ்வரன்





அவுஸ்திரேலிய படையினர் சொலமன் தீவுகளை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விட்டதாக ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.





கடந்த புதன்கிழமை பிரதமர் மனஸீஹ் சொகவாரேயை பதவியிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.





ஆர்ப்பாட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அரச கட்டிடங்களுக்குத்தீ வைத்தனர். இதனையடுத்து 36 மணித்தியால ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் மனஸீஹ் சொகவாரே அவுஸ்திரேலியாவிடம் உதவி கோரியிருந்தார்.





இதனையடுத்து அவுஸ்திரேலியா சொலமன் தீவுகளுக்கு அமைதி காக்கும் படையை அனுப்பியது. தற்போது அவுஸ்திரேலிய படையினர் சொலமன் தீவுகளை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விட்டதாக ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.