மெல்பேர்ண் விபத்தில் வயோதிபர் பலி - மனைவி படு காயம்

banner

ஆஸ்திரேலியா, மெல்பேர்ணில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். அவர் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.





மெல்பேர்ண் புறநகர் பகுதியிலுள்ள நொதர்ன் நெடுஞ்சாலையில் இன்று மாலை 4.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.





இரு கார்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்த கணவனும், மனைவியும் வீடு திருப்புகையியே இவ்விபத்து ஏற்பட்டு, கணவர் உயிரிழந்துள்ளார்.





மற்றைய காரில் பயணித்த இருவரும் காயமடைந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.





விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரட்ணவடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.