சொலமன் தீவுகளில் கருகிய நிலையில் சடலங்கள் மீட்பு

banner

ந. பரமேஸ்வரன்





சொலமன் தீவுகளில் எரிந்த நிலையில் காணப்பட்ட கட்டிடம் ஒன்றினுள்ளிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சைனாடவுன் பகுதியிலுள்ள கடையொன்ர்னுலிருந்தே இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மூன்றும் கருகிய நிலையில் காணப்படுகின்றன. இவர்கள் உள்ளூர்வாசிகளா, சீனர்களா என்பதை கண்டு பிடிக்க
முடியவில்லை.





கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ஹொனியாரா பொலிஸார் தெரிவித்தனர் இதுவரை சந்தேகத்தின் பேரில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் முடக்க காலத்தில் வேலையின்மை அதிகரித்தமையே வன்முறைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.