தமிழக மீனவர்கள் 43பேரின் மறியல் நீடிப்பு

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.





ஊர்காவற்றுறை நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று எடுக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான விளக்கமறியலை ஜனவரி 27 ஆம் திகதி வரை நீடிக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.





நெடுந்தீவுக்கு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.