'வட்ஸ்அப்'பில் ஆபாச படம் அனுப்பியவருக்கு நேர்ந்த கதி

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

தொலைத் தொடர்பு சேவைகள் இப்போது எவ்வளவோ அபிவிருத்தி அடைந்து விட்டன. கைத்தொலைபேசியில் படங்களை அனுப்பலாம். குரல் பதிவுகளை அனுப்பலாம்.வீடியோக்களை அனுப்பலாம். எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் செய்ய முடிந்தாலும் சிலர் இவற்றை பிழையான வழியில் பயன்படுத்தி மாட்டிக்கொண்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.





கைத்தொலைபேசியில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி சக ஊழியருக்கு அந்தரங்கமான பாலியல் இச்சையை தூண்டும் வகையில் வீடியோவை காண்பித்த பொரலஸ்கமுவ நகரசபை பாதுகாப்பு ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.





பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் இந்த நபர் கைது செய்யப்பட்டார். இவரை நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது ஒரு லட்ச ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இந்த நபர் மாநகர சபையில் பணி புரியும் சக பெண் ஊழியர் ஒருவருக்கு தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் பாலியல் இச்சைகளை தூண்டும் வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளார்.





அந்தப் பெண் இதற்கு எதிராக இந்த நபரை திட்டியுள்ளார். பின்னர் இந்த நபர் தனது அந்தரங்கத்தை படம் எடுத்து அனுப்பி வைத்து பாலியல் ரீதியாக அந்தப் பெண்ணை துன்புறுத்தியதாக பெண் ஊழியரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விதுர மஞ்சநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.





முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் ஒரே அலுவலகத்தில் தொழில் புரிவதால் முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவிக்கலாம் என்பதால் சந்தேகநபருக்கு பிணை வழங்கக் கூடாது என பொலிஸார் தெரிவித்தனர்.





நீதவான் சந்தேகநபரை கடுமையாக எச்சரித்து ஒரு லட்ச ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதித்தார்