தாயின் அஸ்தியை அலுவலகம் எடுத்துச்சென்ற மகன் கைது!

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

தனது தாயின் உடலை தகனம் செய்து சாம்பலை அலுவலகம் எடுத்துச்சென்ற மகனை, பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.





மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்த தாயின் சாம்பலை வீட்டில் வைத்து காலையும் மாலையும் வழிபட்டு வந்த இந்த நபர் , மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜகிரிய நாவல வீதியிலுள்ள தனது அலுவலகத்திற்கு எடுத்துவந்து வைத்துள்ளார்.





பொலிஸ் அவசர இலக்கத்திற்கு (119) கிடைத்த தகவலொன்றை அடுத்து பொலிஸார் நாவல வீதியிலுள்ள கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தின் வரவேற்பாளரின் மேஜைக்கு அருகே இருந்து இந்த சாம்பல் பார்சலை கைப்பற்றியுள்ளனர்.





தனது தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாகவும் அங்குள்ள இடுகாடு ஒன்றில் உடலைத் தகனம் செய்து சாம்பலை வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அதை தான் சாரதியாக தொழில் புரியும் அலுவலகத்துக்கு எடுத்து வந்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.





ராஜகிரிய நாவல வீதியில் தொழில் புரியும் இவர் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த போகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபராவார்.





இவரது மனைவியிடமிருந்தும் வாக்குமூலம் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாக்குமூலம் பெறும் நோக்கில் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.