'மெல்பேர்ணில் தாயும், மகளும் கொலை' - வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு

banner

மெல்பேர்ணில் தாயையும் மகளையும் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபால் சர்மா மீதான வழக்கு விசாரணை மெல்பேர்ண் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மே 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.





மெல்பேர்ண் வடக்கு மில்பார்க் பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி ஆறு வயதுக் குழந்தையும் தாயும் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர். அப்பெண்ணின் கணவரே இக்கொலைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை அறிந்ததே. இவர்கள் இந்தியாவின் பாஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.