'மீனவர் வலையில் சிக்கிய 7 அடி முதலை'
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
முந்தல் – சின்னப்பாடு வென்னப்புவல கடற்பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய 07 அடி முதலையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலிலிருந்து மீனவர்கள் வலையை கரையை நோக்கி இழுத்துக் கொண்டு வந்தபோது அந்த வலை பெரும் கனமாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
வலை கரையை வந்தடைந்ததும் அந்த வலைக்குள் பெரிய மீன் ஒன்று சிக்கிவிட்டதாகவே தாம் முதலில் கருதியதாகவும் எனினும், அந்த வலைக்குள்ளிருந்து 07அடி நீளமான முதலையொன்று இருப்பது பின்னர் கண்டறியப்பட்டதாகவும் மீனவர்கள்தெரிவித்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பில் ஆனவிழுந்தான் மற்றும் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீனவர்களின் உதவியோடு முதலையை பிடித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
Related Posts