நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு, நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவிலுள்ள எரிபொருள் நிலையம் ஊடாக, எரிபொருளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு வழங்கவுள்ளது.
அத்துடன், எரிபொருள் வழங்கும்போது அறவிடப்படும் பணத்தை பெற்றுக்கொள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரை பொலிஸ் எரிபொருள் நிலையத்திற்கு அனுப்புவதற்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எரிபொருள் பெற்றுக் கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருக்க வேண்டும் என்பதுடன் பணம் செலுத்தியே எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Related Posts