புலிகளின் ஆயுதங்களை மீட்க தேடுதல் வேட்டை

banner

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவின் விநாயகபுரம் பகுதியில் உள்ள வயல் பகுதியிலுள்ள மரமொன்றின் கீழ் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வியாழக்கிழமை மாலை மூதூர் நீதிமன்ற நீதிவானின் அனுமதியுடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.





எனினும் அங்கிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.





யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.





இதன் போது ஐந்தடிக்கு மேல் தோண்டியும் எந்தவிதமான ஆயுதங்களும் கிடைக்கப்பெறவில்லை. இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் உட்பட பாதுகாப்பு தரப்பினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.