பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு!

World 1 வருடம் முன்

banner

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 900 பேர் பலியாகியுள்ளனர். 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.





ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.





தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.





அத்துடன், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.