இந்திய உயர்மட்டத் தூதுக்குழு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கை வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து இந்தத் தூதுக்குழு கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களையும் இந்தத் தூதுக்குழுவினர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்துவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.