யாழ் மாவட்ட அரச அதிபரின் விசேட அறிவிப்பு

banner

யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய அரச திணைக்களங்களும் எரிபொருள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.





யாழ் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை சில பிரதேச செயலகங்களில் கடமையாற்றும்
உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட மை தொடர்பில் அரச அதிபரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.





அவர் மேலும் தெரிவிக்கையில் பிரதேச செயலகங்கள் சிலவற்றால் தமது பிரதேசஙகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.





அதேபோல் ஏனைய அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தேவை அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.