தென்னிலங்கையில் பாதாள கோஷ்டி வெறியாட்டம் - இன்றும் இருவர் கொலை!
மொறட்டுவை, கட்டுபெத்த, பிலியந்தலை வீதியில் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய ரக வேன் ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களும் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கையில் கடந்த 6 வாரங்களுக்குள் சுமார் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான சூட்டு சம்பவங்கள் பாதாள குழுக்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.
Related Posts