எமனானது பெற்றோல் - விளக்கேற்றிய பெண் உடல் கருகி பலி! திருமலையில் சோகம்!!
திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சிளை வீசியுள்ளார். அது சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலன்மீது விழுந்ததையடுத்து தீப்பற்றியுள்ளது.
இதனால் அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி, உடல் கருகி பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இத்தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts