தென்னிலங்கையில் பயங்கரம் - இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை!
Sri Lanka 1 வருடம் முன்
தென்னிலங்கையில் இன்றைய தினமும் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொலன்னாவைச் சந்தியில் வைத்தே 38 வயதான நபரொருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், சந்தியில் நின்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு மொரட்டுவ பகுதியில் நேற்றைய தினமும் இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
மே 30 திகதி முதல் இன்றுவரை இலங்கையில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Related Posts