5 லீற்றர் பெற்றோலுக்கு 5 போத்தல் சாராயம்!

banner

ஐந்து போத்தல் சாராயத்துக்கு, 5 லீற்றர் பெற்றோலை பண்டமாற்று செய்து கொண்ட சம்பவமொன்று இறக்குவானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.





இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் தனது வாகனத்தில் இறக்குவானை நகருக்கு வந்த போது வாகனத்தில் பெற்றோல் இல்லாததால், வாகனம் இடை நடுவில் நின்றுள்ளது.





அவர் ஐந்து லிட்டர் பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக அங்கும் இங்கும் தேடியலைந்தும் ல் கிடைக்கவில்லை.





இந்த சந்தர்ப்பத்தில் சில இளைஞர்களை, இந்த இரத்தினக்கல் வியாபாரி சந்தித்துள்ளார். அதிக விலைக்காவது பெற்றோல் பெற்று தரும்படி அவர் இளைஞர்களிடம் கேட்டுள்ளார்.





இரவு நேரம் ஆகிவிட்டதால், இரத்தினக்கல் வியாபாரி குறித்த இளைஞர்களிடம், ஐந்து லீற்றர் பெற்றோல் வாங்கித் தந்தால் அதற்கு பதிலாக 5 போத்தல் சாராயம் தருவதாக உறுதியளித்துள்ளார்.





இதனையடுத்து, திருட்டுத்தனமாக பெற்றோல் விற்பனை செய்யும் இடத்தைத் தேடிச் சென்று ஐந்து லிட்டர் பெற்றோலை வாங்கிக் கொண்டு வந்து இரத்தினக்கல் வியாபாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.





இரத்தினக்கல் வியாபாரி உடனடியாக சாராயத் தவறனைக்குச் சென்று உறுதியளித்தபடி ஐந்து போத்தல் சாராயத்தை கொள்வனவு செய்து இளைஞர்களிடம் வழங்கியுள்ளார்.