இலங்கையில் ஆட்டம்காணும் சுற்றுலாத்துறை
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 60 சதவீதத்தால் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடி சூழ்நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இந் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரம் ஆகும்.இருந்தும் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 32 ஆயிரத்து 856 ஆக குறைந்துள்ளது எனவும் பணிப்பாளநாயகம் தெரிவித்துள்ளார்.
Related Posts